Skip to main content

ஆச்சரியக் குறி​யே! என்தமிழ் மயங்கும்...

  

ஆச்சரியக் குறியேஉன்தமிழ் மயங்கும் வரியே!

பாடல் ஒன்றுப் பாடநீ மேடை ஏறும் போது,                                

உன்தகுதி​ மீது பிறவிப் புழுதி படிய லாமா?

திறமைகள்மேல் சாணம்தெளிப்பது  யாரோ?

 

அறிவியல் வினா நாயகனாய்நீ ோன்றஉன்முன்;

விண்தொட்டு நிமிர்ந்து விடைகளை சமர்ப்பிக்க நீ

நம்பும் படைப்பு ஆண்டவன் வருவானா? - ஆய்வால்

கேள்விகளும் நீயே பதில்களும் நீயே எனநீ ஆவாயா?

 

பிறப்பு குறிகளை தகுதியாக நிர்ணயித்து – உன்

கரு உரு மூலத்தளங்கட்கு சாதி பெயரிட்டு – ​பெற்ற

அன்னைத் தந்தையை அவமதிப்புச்செய்ய – அவனை

விடலாமாநீ நிமிர முன்னேறஏணிகடவுளா?

 

தாயின் மடியில் அமர்ந்து தமிழும் பருகி வளர்ந்தாய்

காயம் வியக்க தமிழால் அறிஞனாக எழுந்தாய்!

சாதிச் சாயம் குளியல் இலலை;

108 ​ேங்காய் கள்உடைத்ததில்லை!

 

வெற்றிச் சிகரம் அடைய அங்கே

பேதப் புழுதிகள் படிய லாமா?

 

திறமைகள்மேல் சாணம் தெளிப்பது யாரோ?

தோழ்வி நெருங்கும்போதும் துவண்டு முடங்கிடாதே!
வாழ்வு என்ன வாழ்வு என்று இறங்கி அடங்கிடாதே!

                                         

வளையும் முதுகை நிமிர்த்தி எவனிலும்                                                        

உயர்ந்தவன் நீயேஎன காட்டவேண்டும் ஊருள்                                                    பேதம் அகற்றி ஒற்றுமைக்கு  பாலம் அமைக்க வேண்டும்

 

Comments

Popular posts from this blog

கற்புக் கசாப்புக்காரன் காதலித்து வெட்டுகிறான்; ஆடுகளோ...

  கணைகளால்   அடைந்த   கனிகள் ! கேள்வி :    " பெண்களின்   விதவைக்   கோலம் "  என்று   தலைப்பிட்டு   நீங்கள்   கவிதைச்   சிட்டு  ( சனவரி  1990  இதழில் )  எழுதியுள்ள  - " கற்புக்   கசாப்புக்காரன் காதலித்து   வெட்டுகிறான் ; ஆடுகளோ ... கதறாமல்   மடிகின்றன " --   விளக்கம்   தேவை !   [ நமது   வளைத்   தளங்களில்  "             "  என்ற   தலைப்பில்   இக்கவிதைப் பதிவு   உள்ளது ]   பதில் :         ஒரு   கல்லூரி   மாணவி    உடன்    படிக்கும்   மாணவன்   ஒருவனை   காத லிக்கின்றாள் ;  காதலனும்   அருகே   இருக்கின்ற   கோயிலுக்கு   அவளை     அழைத்துச்   சென்று ,    மனித   சிற்பிச்   செதுக்கிட்ட   கடவுள்   என்று  ...

ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை...

ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை நாடி நாடி நாடியே நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடியே மாண்டவர்கள் நாளுமே கோடி கோடி கோடியே எண்நிறைந்த கோடியே! பாடல் - சிவவாக்கியர் பாடலில் 'உருஅறியாத வெறுமையை' அல்லது அது போன்றதை நீக்கி உட்கலந்தசோதி என்பதானது எந்தப் பார்ப்பனனால் நுழைக்கப் பட்டது என்பதுஆய்வுச்செய்யப்படவேண்டிய ஒன்று] திருக்குறள் உட்பட ஏராளமான தமிழ் இலக்கியங்களில் பாக்கள் ஆரியர்களால் மறைக்கப்பட்டும் மெய்பொருள் மாறுப்பட சொற்கள் நீக்கப்பட்டும் தொடர்பற்ற சொற்கள் நுழைக்கப்பட்டும் உள்ளன!